JESUS CHRIST is the ONLY WORD






→ Vashni left a message for you

zorpia
Vashni has left you a personal message. Click on the button below to view it.
View Private Message
This message is sent on behalf of Vashni.
Zorpia Co. Ltd. P. O. Box #28960, Gloucester Road Post Office, Hong Kong

எனது புதிய இணையத்தளத்தில் பதிவுகளை இனி காணலாம். நன்றி.

எனது புதிய இணையத்தளத்தில்

www.christawan.com

பதிவுகளை இனி காணலாம்.

நன்றி.
02- 02- 2016

பாருங்கள்.

உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமையும், உங்களைப் பெற்ற சாராளையும் நோக்கிப் பாருங்கள். அவன் ஒருவனாயிருக்கையில் நான் அவனை அழைத்து அவனை ஆசீர்வதித்து, அவனைப் பெருகப்பண்ணினேன். (ஏசாயா 51:2) இன்று உங்களையும் அவர் ஆசீர்வதிக்க வல்லமையுள்ளவராக இருக்கின்றார். தினமும் ஒரு நற்செய்தி

பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்களா?




பொதுவாகவே மதம் சார்ந்த விவாதங்கள்,அனைத்து மதங்களின் மத குருமார்கள் செய்யும் தவறுகள் சார்ந்த விவாதங்களில் பங்கு பெறுவதில்லை.அதில் எவ்வித விருப்பமும் இல்லை.

ஆனால் கடந்த பல மாதங்களாக மோடி மீதும்,பாரதியஜனதா மீதும் வைக்கும் விமர்சனங்களில்,அது சார்ந்த விவாதங்களில் நம் கேள்விகளுக்கு நியாயமான பதிலை சொல்ல இயலாத பலர்,அடுத்த அஸ்திரமாய் நம்மீது கிறித்துவர்கள் எல்லாம் அந்நிய கைக்கூலிகள் என்றும்,பணம் கொடுத்து மக்களை ஏமாற்றி மதம் மாற்றுபவர்கள் என்றும்,அமெரிக்காவுக்கு ஆதரவானவர்கள் என்றும் தொடர்ந்து எழுதி வருகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் கடந்து போய் விடுவதுண்டு!

பொதுவாகவே நேர்மையான வாதங்களில் பங்கு கொள்ள விரும்பாதவர்கள் அல்லது இயலாதவர்களின் அடுத்த அஸ்திரம் ஒன்று சாதியாகவோ, அல்லது மதமாகவோ தான் தொடர்ந்து இருந்து வருகிறது!

எதோ வெளிநாடுகளில் இருந்து அரசு சாரா உதவி நிறுவனங்கள் அனுப்பும் பணத்தால் தான், இங்கே கிறித்துவர்கள் வாழ்வது போலவும், அந்த பணத்தை எல்லாம் மதம் மாற்ற பயன்படுத்தப்படுவது போலவும்,அப்பாவி மக்களை மூளை சலவை செய்து ஏமாற்றித் தான் கிறித்துவ மதத்துக்கு மாற்றுகிறீர்கள் என்றும், சம்மந்தம் இல்லாமல்,தொடர்ந்து சிலர் நம்மை நோக்கி விமர்சனம் வைப்பதால்,ஒன்றிரண்டு விடயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள பிரியப் படுகிறேன்.

எனக்கு இந்த காசு கொடுத்து மதமாற்றம் செய்கிறார்கள் என்ற விடயத்தில் உடன்பாடு இல்லை.அப்படி யாராவது செய்தால் அது தவறு.வெறுமனே எண்ணிக்கையில் **பெயர்* கிறித்துவர்கள் அதிகமாக இருக்க வேண்டும் என்று வேதாகமம் எதையும் சொல்லவில்லை.அப்படியான கட்டாயம் எதுவும் இல்லை.நீங்கள் போய் உலகத்தில் உள்ள சகல மனுஷர்களுக்கும்,சுவிசேஷத்தை அறிவியுங்கள் என்று தான் வேதாகமத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

இயேசு கிறிஸ்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும்,அப்படி ஏற்றுக் கொள்பவன் தான் உண்மையான கிறித்துவன் என்பது தான் கிறித்துவத்தின் அடிநாதம்.அப்படி சொந்த ரட்சகாராக ஏற்றுக் கொள்வதும் கூட,எவருடைய நிர்பந்தமும் இன்றி,முழு மனதோடு ஏற்றுக் கொண்டதாய் இருக்க வேண்டும். இது தான் கட்டளை!

அப்படியானால் பிறருடைய நிர்பந்தத்தின் பேரிலோ அல்லது பணம் கொடுத்து எங்களை மதம் மாற சொல்கிறார்கள் என்பதாலோ,ஒருவேளை சிலர் மதம் மாறுகிறார்கள் என்று வாதத்துக்கு வைத்துக் கொண்டால் கூட, அப்படியான மனிதர்கள் எல்லோரும் கிறித்துவர்கள் ஆகி விட மாட்டார்கள்.காரணம் உள்ளத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து பார்க்கிறவர் தேவன் என்றே வேதாகமம் சொல்கிறது.

மற்ற மதங்கள் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. அவற்றின் மதிப்பீடுகள் குறித்தும் எதுவும் தெரியாது.ஆனால் நான் அறிந்த கிறித்துவத்தின் மதிப்பீடுகள் உயரமானவை என்பதை நான் எப்போதும் நம்புகிறேன்,உணர்கிறேன்.! காரணம்,ஒவ்வொரு மனிதனின் செயல்பாட்டையும் விட, அதை செய்யும் போது அவன் மன நிலை என்னவாக இருந்தது,அதாவது அதை மகிழ்வோடு செய்தார்களா இல்லாவிட்டால்,வேறு வழி இல்லாமல் வேண்டா வெறுப்பாக செய்தார்களா என்பதைப் பொறுத்தே அதன் பலன் அல்லது உள்ளத்தின் உண்மையான, நிலைப்பாட்டை தான் தேவன் பார்க்கிறார் என்றே வேதாகமம் சொல்கிறது!

இதற்கு ஆதாரமாய் பல உதாரணங்களை சொல்லலாம். ஆயினும் ஒரு சிலவற்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். ஆலயத்தில் இருவர் காணிக்கை செலுத்துகிறார்கள். ஒருவர் வசதியானவர். இன்னொருவர் ஏழை விதவைப் பெண். பணக்காரர் காணிக்கை போடுகிறார். அவரைப் பொறுத்தவரையில் அதிகம் காணிக்கை போட்டு இருக்கிறார். ஏழை விதவையோ தன்னிடம் இருந்த சில்லறை காசுகள் அனைத்தையும் காணிக்கையாக போடுகிறார்.

தேவன் யாருடைய காணிக்கை பெரிது என்கிறார் என்றால்,ஏழை விதவையின் சில்லறை காசுகள் தான் பெரிது என்கிறார். அதற்கு காரணம் தன்னிடம் உள்ள எல்லாவற்றையும் முழுமையாக தேவனுக்கு அர்பணிக்க வேண்டும் என்று எண்ணியே அவள் காணிக்கை செலுத்தினாள்.பணம் எவ்வளவு என்பது முக்கியம் அல்ல.அதனால் அந்த காணிக்கை உயர்ந்தது என்று சொல்கிறார்.

சாதாரணமாக பார்த்தால் பணக்காரர் நூறு ரூபாய் போட்டு இருக்கிறார் என்று எண்ணிக் கொள்ளலாம்.ஏழைப் பெண் ஒரு ரூபாய் போட்டு இருக்கலாம். கணக்கின் படி பார்த்தால் பணக்காரர் தான் அதிகம் காணிக்கை போட்டு இருக்கிறார் என்றே நாம் சொல்ல இயலும். ஆனால் ஒரு செயலை அல்ல,அந்த செயலின் பல காரணிகளை,சூழல்களை, உள்ளத்தின் நினைவுகளை சீர் தூக்கி பார்த்து நியாயம் சொல்பவர் தேவன் என்று வேதாகமம் சொல்கிறது!

இப்படியாக பல மதிப்பீடுகளின் உயர்வை சொல்ல இயலும்.ஒரு தவறான பெண்ணோடு அல்லது ஒரு பெண்ணோடு வேசித்தனத்தில் ஈடுபட்டால் தான் அது விபச்சாரம் என்பதில்லை.
ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தால், அதுவே விபச்சாரம் தான் என்கிறது வேதாகமம்.

ஆலயத்துக்கு போகிறோம், தேவனை தரிசிக்கிறோம் என்கிறோம். அப்படி உண்மையாக தேவனை தரிசிக்க விரும்பினால்,முதலில் சண்டை போட்டு இருக்கும் உன் சொந்த சகோதரனோடு போய் சமாதானம் ஆன பின்பு,என் ஆலயத்துக்கு வா, வந்து காணிக்கை செலுத்து அப்பொழுது நான் அதை ஏற்பேன். அது இல்லாமல் சும்மா நானும் ஆலயத்துக்கு போனேன், ஆண்டவரை தரிசித்தேன், காணிக்கை செலுத்தினேன் என்று சொல்வாய் என்றால் அதை தேவன் ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டார். சக மனிதர்களை, சொந்த சகோதரர்களை நேசிக்காத மனிதன் எப்படி கடவுளை நேசிப்பான் என்பதற்கான செய்தி அது!

பல நேரங்களில் நாம் உள்ளத்தில் என்ன எண்ணுகிறோம் என்பது வெளியில் உள்ளவர்களுக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு விடயத்திலும் உள்ளத்தின் நினைவுகளை வைத்தே சரியா தவறா என்று பார்ப்பது தான் கிறித்துவத்தின் மதிப்பீடு.

ஆக வெறும் புற அடையாளங்களை வைத்து மனிதனை மதிப்பிடுபவர் அல்ல கிறிஸ்து. அப்படி இருக்கும் போது பணத்துக்காகவோ,அல்லது வேறு நிர்பந்தங்களுக்காகவோ மதம் மாறினால்,
அதை ஒரு போதும் கிறிஸ்து ஏற்கமாட்டார். அப்படி மாறுபவர்கள் கிறித்துவர்களும் அல்ல.
கிறித்துவம் என்பது வெறும் புற அடையாளங்களால் ஆனது அல்ல.அது வாழ்வியல்!

வெறும் பெயர் மட்டுமே கிறிஸ்துவம் என்பதன் அடையாளம் ஆகி விடாது.இன்னும் சொல்லப்போனால் பெயர் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கிறிஸ்துவை முழு மனதோடு ஏற்றவர்கள் தான் கிறிஸ்துவர்கள்.

ஒன்றும் தெரியாத ஏழை அப்பாவி மக்களைத் தான் இப்படி கிறித்துவர்களாக மதம் மாற்றுகிறார்கள் அல்லது பணம் கொடுத்து மதம் மாற்றுகிறார்கள் என்று சொல்பவர்களுக்கு ஒரு சிறு உதாரணம்.

எல்லோருக்கும் நடிகர் சாருஹாசனைத் தெரிந்திருக்கும். யார் இந்த சாருஹாசன்? நடிகர் கமல்ஹாசனின் உடன் பிறந்த சகோதரன். சுஹாசினி அவர்களின் தந்தை.மணிரத்தினத்தின் மாமனார். இவரது சிறப்பு அம்சம் என்னென்ன என்று கேட்பீர்கள் என்றால், சினிமா துறைக்கு வருவதற்கு முன்பே நீதிமன்றங்களில் முப்பது** ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றியவர்.அப்படியானால் ஒரு தலைமுறைக்கு முன்பே கல்வி அறிவு கொண்ட மூத்த கல்வியாளர். பிராமண குடும்பத்தில் பிறந்த காரணத்தால் வேதங்கள் நான்கையும் முறையாக கற்றுத் தேறியவர் மட்டுமல்ல சில காலங்களுக்கு முன்புவரை அதை பலருக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டும் இருந்தவர்.

சமஸ்கிரித மொழியை முறையாக கற்றுத் தேறிய பண்டிதர் மட்டுமல்ல நீண்ட நெடிய காலமாக சமஸ்கிரித ஆசிரியராக இருந்து வகுப்புகள் நடத்துபவர். கோயில் வழிபாடுகளில் உள்ள அத்தனை சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கும் உண்மையான அர்த்தம் தெரிந்தவர். திரைப் படங்களில் அவர் ஏற்கும் வேடங்களில் பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் கோவில் அர்ச்சகராக அல்லது வேதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக,சங்கீதம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக எதோ ஒரு வகையில் மதம் சார்ந்த பாத்திரமாகவே ஏற்று நடிப்பார்.அப்படியான பாத்திரங்களையே அவர் விரும்புவார் என்றும் சொல்லக் கேள்விப் பட்டு இருக்கிறேன். சிறந்த நடிப்புக்காக மாநில மற்றும் தேசிய விருது வாங்கியவர்.

இந்து மத வழிபாட்டை,வேதங்களை எல்லாம் முறையாக பயிற்றுவிப்பவர் என்று மட்டுமல்லாது அதையே வாழ்வியலிலும் கடைபிடித்து வந்த மனிதர். கமலஹாசனைக் குறித்தும் அவரது வாழ்வைக் குறித்தும் குறிப்பாக அவரது திருமண சச்சரவுகள் குறித்தும் எப்போதும் கடுமையான விமர்சனங்கள் கொண்ட மனிதர்.அதாவது அவரைப் பொறுத்த வரையில் ஒழுக்கம் என்பதற்கு ஒரு வரையறையை வைத்திருந்த மனிதர்.இவர் அடிப்படையிலேயே நல்ல வசதியானவர் தான். பணத்துக்கான தேவை என்பது அதிகம் இவருக்கு கிடையாது.

இப்படிப்பட்ட ஒரு பூர்வீகத்தை கொண்ட மனிதர்,அதுவும் ஒரு பிராமண குடும்பதை சேர்ந்த தீவிரமாக மத கோட்பாடுகளை கடைபிடிப்பவர், கொஞ்ச காலத்துக்கு முன்பு கிறித்துவை தன் சொந்த ரட்சகராக ஏற்றுக் கொண்டார். இவரை யாராவது ஏமாற்றி மதம் மாற்றி இருப்பார்கள் என்று நம்புகிறீர்களா? அல்லது அப்படி யாராவது வித விதமாய் பேசி ஏமாற்ற நினைத்தாலும்,
ஏமாறும் மனிதரா அவர்?

கடந்த ஆண்டு இவர் எப்படி கிறித்துவை கடவுளாக ஏற்றுக் கொண்டார் என்ற சாட்சி ஒன்றை பார்க்க்க நேர்ந்தது.உண்மையில் மிகுந்த நெகிழ்வான சாட்சியாக அது இருந்தது.வேதாகமத்தை மிக ஆழமாக வாசித்து வந்திருக்கிறார்.கிறித்துவத்தை உடனே எல்லாம் அவர் ஏற்கவில்லை. அதை ஏற்பதற்கு முன் பல ஆண்டுகளாக வேதாகமத்தை வாசித்து வந்திருக்கிறார். அதில் தெளிவு கிடைக்காமல் அவர் கிறித்துவத்தை ஏற்கவில்லை என்கிறார்.

சாதாரணமாக கிறிஸ்துவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நபர்களுக்கு கூட இந்த அளவுக்கு வேதாகமத்தை குறித்த வாசிப்பு அனுபவம் இருக்குமா என்பது சந்தேகமே! அந்த அளவுக்கு ஆழ்ந்து வாசித்து, வேதகாம வார்த்தைகளை ஞாபகத்தோடு பல்வேறு இடங்களில் குறிப்பிட்டு பேசுகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதையும் ஒரு தொலைக்காட்சி நாடகம் போலவே கதை வசனம் எழுதி தயாரித்தும் இருக்கிறார். கோவில்கள் சொல்லப்படும் சமஸ்கிரித ஸ்லோகங்கள் பலவற்றுக்கு உண்மையான தமிழ் அர்த்தம் என்ன, அவை எதைக் குறிக்கின்றன,பரிசுத்த வேதாகமத்துக்கும் இந்த ஸ்லோகங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை எல்லாம் மிக தெளிவாக விளக்கி சொல்கிறார்.பலவேறு ஆச்சயர்யமான விடயங்களை பகிர்ந்து இருக்கிறார். ஒருவேளை அந்த ஸ்லோகங்கள் எல்லாம் தெரிந்த நண்பர்கள், அவர் சொல்லும் விளக்கங்கள் எல்லாம் சரிதானா ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

கிறித்துவராக மாறிவிட்டால் பெயர்மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் எதுவும் கிடையாது. அப்படி பெயர்மாற்றினால் தான் கிறித்துவர் என்ற நிபந்தனையும் கிடையாது.

அவரது சாட்சி குறுந்தகடாகவும் வெளி வந்து இருக்கிறது. யூடியூபிலும் கூட காணக் கிடைக்கிறது.பார்க்க வாய்ப்புள்ளவர்கள் பார்த்துக் கொள்ளலாம். இவரைப் போன்ற பலர் இப்படியாக கிறித்துவை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள்.பெரும் பெரும் பணக்காரர்கள்,
எவ்வித பொருளாதார நெருக்கடிக்கோ, துன்பங்களுக்கோ ஆட்படாத மனிதர்கள் பலர் மாறி இருக்கிறார்கள். சாருஹாசன் ஒரு பிரபலமான மனிதர் என்பதால் உங்களிடம் சொல்வதற்கு எளிமையாக இருக்கிறது!இந்த வயதில் அவர் கிறித்துவராக மாற வேண்டிய அவசியம் என்ன? பணத்துக்காகவா?

பிரபலம் இல்லாத பலர் இருக்கிறார்கள். சினிமாவில் இன்னொருவரை உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் பழைய ஏ.வி.எம் ராஜனை சொல்லலாம். அவரும் கூட பல திரைப் படங்களில் கோவில் அர்ச்சகராக, அல்லது கடவுள் பயம் போன்ற விடயங்களை சொல்லும் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தவர். அவரும் இயேசுவை ஏற்றுக் கொண்டவர். காசு பணத்துக்கு பஞ்சம் இல்லாத மனிதர் தான்.

ஆக நான் சொல்லவரும் செய்தி என்னவென்றால் இங்கே எல்லோரும் பணம் கொடுத்து தான் மதம் மாற்றுகிறார்கள்/மாறுகிறார்கள் என்ற குற்றசாட்டை முழுமையாக ஏற்க இயலாது.
அப்படி செய்வதாக இருந்தால் சாருஹாசன் போன்ற பின்னியை கொண்ட மனிதர்கள் எல்லாம், ஏசுவை ஏற்றுக் கொண்டிருக்க்கவே முடியாது. ஒருவேளை அப்படி யாராவது பணம் கொடுத்து மதம் மாற்றுவார்கள் என்றால் அது தவறு. அப்படி பணத்துக்காக மாறுபவர்கள் உண்மையான கிறித்துவர்களாகவும் இருக்க மாட்டார்கள் என்பதே நிதர்சனம்!

இத்தனை நாள் இந்துவாக இருந்த போது,இந்தியராக கருதப்பட்ட சாருஹாசன், கிறித்துவ மதத்தை ஏற்றுக் கொண்ட படியால்,இனி அவரும் அந்நிய நாட்டு கைக்கூலி,அமெரிக்க அடிமை என்றெல்லாம் புதுப்பட்டம் வாங்குவாரா இல்லையா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்!

இங்கே யாரும் எந்த மதத்தையும் பின்பற்றலாம், மதமும் கடவுளை இல்லை என்றோ வேண்டாம் என்று கூட சொல்லலாம். அதுவல்ல பிரச்சினையும்,விவாதமும்!

ஸ்லோகங்களும்,அதற்கான விளக்கங்களும் குறித்த சாருஹாசனின் காணொளி இணைப்பு ஒன்று கீழே!

காணொளி http://www.youtube.com/watch?v=iqBtFoO7sFE  நன்றி !

courtessy: ஆன்டனி வளன்

தலைநிமிர்ந்து நில்!

'உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.' (எபிரெயர் 11:38)

மாரடைப்பினால் கணவன் திடீரென இறந்துவிட, 'இப்படியொரு மரணம் எனது கணவனுக்கு வரவேண்டியது ஏன்?” என்று கேள்விக்கு மேல் கேள்வி கேட்டாள் ஒரு இளந்தாய். மனதின் உணர்வுகளை வெளிப்படுத்துவது தவறல்ல; ஆனால், நாமே நீதி விசாரிக்கிறவர்களாக மாறிவிடுகிறோம், அது தவறு. இதிலிருந்து வெளிவர, எபிரெயருக்கு எழுதப்பட்ட இப் பகுதி நிச்சயம் உதவும்.

‘உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை.’ அதாவது, 'அவர்களை ஏற்க இவ்வுலகிற்குத் தகுதியில்லாமல் போயிற்று” என்று திருவிவிலிய மொழிபெயர்ப்பு கூறுகிறது. இந்த இவர்கள் யார்? மகிழ்ச்சிகரமான குடும்ப வாழ்வில், புகழ் படைத்தவர்களாக, விருப்பங்களை விரும்பியபடி பூர்த்திசெய்து, இவ்வுலகில் பிரச்சனைகளின்றி ஜீவித்தவர்களா? இல்லை. எபிரெய ஆசிரியர், இந்த நிருபத்தை யூத கிறிஸ்தவர்களுக்காகவே எழுதினார் என்று அறியப்படுகி றது. இவர்கள், மற்ற யூதர்களாலும், ரோமர்களாலும் பல உபத்திரவங்களை அனுபவித்ததால், மனம் நொந்து பின்மாற்றத்திற்குள்ளாகும் ஆபத்தில் இருந்தனர். இவர்களுக்காகவே இந்த ஆசிரியர், கிறிஸ்துவுக்கு முன்னரும், வேதாகமத்தில் சேர்க்கப்படாத இடைப்பட்ட காலப்பகுதியிலும், மெய்த் தேவனில் கொண்ட விசுவாசத்தினிமித்தம் பாடு அனுபவித்தவர்களைக்குறித்து விளக்கமாக எழுதினார். இந்த விசுவாச வீரர்களுக்கு இந்த உலகம் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. இவர்களை இந்த உலகமும் ஏற்கவில்லை. ஆனால், இவர்கள் கொண்டிருந்த விசுவாசம் அன்று இந்த உலகத்திற்குச் சவாலாக அமைந்திருந்தது. இவர்களோடு சேர்ந்து, முதலாம் நூற்றாண்டு யூத கிறிஸ்தவர்களும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையும்படி விசேஷித்த நன்மையாக இயேசு கிறிஸ்து தரப்பட்டாரே என்று அன்றைய விசுவாசிகளை ஆசிரியர் தைரியப்படுத்துவதையே நாம் வாசிக்கிறோம்.

இந்த இயேசுதான் நம்மையும் இரட்சித்திருக்கிறார். அவரில் கொண்டி ருக்கும் விசுவாசத்தினிமித்தம் நாம் என்ன பாடு அனுபவித்திருக்கிறோம்? இப்படியிருக்க, நாளை மாறிப்போகின்ற இவ்வுலக கஷ்ட துன்பங்களிலே நாம் கலங்கித் தவித்து இந்த உலகத்தில் எப்படி வாழுவேன், உலகம் என்னை என்ன சொல்லும் என்றெல்லாம் தடுமாறுவது ஏன்? உண்மைதான், கணவனை இழப்பது என்பது இலேசான விடயம் அல்ல. ஆனால், தம்முடைய தாசர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டபோதும், அவர்கள் அருகில் நின்று தேற்றிய கர்த்தர், இன்று உங்களை விட்டுத் தூரப்போவாரா? என்ன வந்தாலும் எனக்கு இந்த உலகம் ஒன்றுமில்லை என்று சொல்லி, இயேசுவுக்காய் தலைநிமிர்ந்து வாழுவோமாக.


courtessy: www.facebook.com/World.Tamil.Christians
நம்மிடம் இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழப் பழகிக் கொள்வோம்! 



நன்றி நண்பரே - தினமும் ஒரு நற்செய்தி /  https://www.facebook.com/GoodNewsDailytamil 

விசுவாசமாயிருங்கள்

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. (எபேசியர்  2:8-9)

விசுவாசத்தைக் குறித்து அப்போஸ்தலர்கள் தங்கள் நிருபங்களுக்கூடாக அநேக காரியங்களைப் போதித்துள்ளார்கள். ஒருபோதும் விசுவாசம் கொள் என்று அப்போஸ்தலர்கள் கூறவில்லை. காரணம் நாம் விசுவாசத்திற்குள்ளாகவே பிறந்திருக்கின்றோம் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். சிலர் நல்லது, இயேசு தமது சீஷர்களிடத்தில் பல தடவைகள் விசுவாசமாயிருங்கள்என்று கூறியுள்ளாரே என்பர். அந்த நேரத்திலே அவருடைய சீஷர்கள் மறுபடியும் பிறந்தவர்களாக இருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பழைய ஏற்பாட்டின் பிரமாணத்திற்கு அமையவே வாழ்ந்தார்கள். இரட்சிப்போ, அதற்கு அப்பால், கிருபையினாலும் விசுவாசத்தினாலும் வருகின்றது. அதனால்தான் இயேசு தமது சீஷர்களைப் பார்த்து விசுவாசமாயிருங்கள் என்று கூறி அதை நிறைவேற்ற செய்தார். எவ்வாறாயினும், கிறிஸ்துவுக்குள் விசுவாசமானது உங்கள் ஆவிக்குள் இப்போது ஊற்றப்பட்டுள்ளது.

2பேதுரு 1:1ல் அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதுகிறதாவது, நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற இயேசுகிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப்போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது:கவனியுங்கள் அப்போஸ்தலனாகிய பேதுருவே இதை எழுதுகின்றார். “...அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு...இது கிறிஸ்துவுக்குள் சகல விசுவாசிகளையும் குறித்து பேசுகின்றது. நாம் அப்போஸ்தலருடன் கூடவே விசுவாசத்தைப் பெற்றுக்கொண்டுள்ளோம். அதை சுதந்தரித்துள்ளோம். அதை நாம் உருவாக்கவோ வடிவமைக்கவோ வேண்டியதில்லை. அது கிறிஸ்து இயேசுவின் சுவிசேஷமான வசனத்திற்கூடாகவே வருகின்றது.

அப்போஸ்தலனாகிய பவுல் கிறிஸ்துவின் சாPரத்திற்கு நிருபங்ளை எழுதும்போது இந்த சத்தியங்களையே கூறுகின்றார். ரோமர் 12:3 ல் நாம் வாசிக்கிறோம். அல்லாமலும், எனக்கு அருளப்பட்ட கிருபையினாலே நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், அவனவனுக்குத் தேவன் பகிர்ந்த விசுவாச அளவின்படியே, தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.வசனம் கூறுகின்றபடி, கிறிஸ்துவின்சாPரமாயிருக்கின்ற சகல பரிசுத்தவான்களுடனும் நாமும் மறுபடி பிறந்தவர்களாக இருக்கின்றோம்! சுவிசேஷத்திற்கூடாக நாமும் அதேயளவு விசுவாசத்தைப் பெற்றுள்ளோம். 

இப்போது, கர்த்தராகிய இயேசு, விசுவாசத்தின் அளவைக் குறித்த ஒரு முக்கிய கூற்றினை கூறுகின்றார். அதனை நீங்களும் நிறைவேற்றலாம். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகின்றேன். கடுகு விதையளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்த மலையைப் பார்த்து, இவ்விடம் விட்டு அப்புறம்போ என்று சொல்ல அது அப்புறம் போம்; உங்களால் கூடாத காரியம் ஒன்றுமிராது என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்’ (மத்தேயு 17:20). இது ஆச்சரியமானது. உயிர்ப்பூட்டுகின்றது. அதாவது நீங்கள் முடிவற்ற வாய்ப்புக்களைக் கொண்ட வாழ்க்கையை வாழமுடியும். வெற்றியுள்ளதும் ஜெயமுள்ளதுமான உங்களுடைய வாழ்வை உருவாக்குங்கள். உங்கள் உலகத்தை விசுவாசத்தினால் ஆளுகை செய்யுங்கள். கடுகளவு விசுவாசம் உங்களுக்கு இருந்தாலும் நீங்கள் ஜெயிப்பீர்கள். இது வியப்புக்குரியது! அவரது விசுவாசத்தினால் பெலனடைவதும் விருத்தியடைவதும் அனைவருக்குமான கடமையாகும்.

மரணம் ஒரு பாலம்.


- வஷ்னீ ஏனர்ஸ்ட்

மரணம் ஒரு பாலம். 

மானிட உலக வாழ்வினை முடிவுக்கு கொண்டுவரும் நிகழ்வே மரணமாகும். அதாவது சரீர வாழ்க்கை முடிவடைதலை நாம் மரணம் என்கிறோம். மனிதனின் புலன்கள், மூளை, இருதயம் போன்றவை செயலிழந்த நிலையில் சரீரப்பிரகாரமான மரணம் ஏற்படுகின்றது. “இதிலே எல்லா மனுஷரின் முடிவும் காணப்படும்” (பிரசங்கி 7:2). இந்த “மரணம் என்ற இறுதியான முடிவுக்கு நீங்கள் ஆயத்தமாக இருக்கின்றீர்களா?” என்பதைக் குறித்த ஒரு எச்சரிப்பையே நாம் இச்செய்தியில் காணப்போகின்றோம்.

மரணம் என்பது – பாவத்தின் விளைவு (ரோ. 5:12) – மனிதர் அனைவருக்கும் நியமிக்கப்பட்டிருக்கின்றது (எபி.9:27). அதாவது ஒவ்வொரு நபரும் மரிக்கவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது – தேகத்தைவிட்டுப் பிரிவது (பிலி. 1:23).


மரணத்திற்கு ஆயத்தமாகுதல்

இயேசுவானவர் இவ்வாறு மரணத்திற்கு முகங்கொடுத்தார், “பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்…” (லூக். 23:46). இதுவே மரிப்பதற்கான சிறந்ததும் அழகானதுமான வழிமுறையாகும். இங்கே பிதாவின் மீது முழுமையான நம்பிக்கையை வைத்தவாறு இயேசு தாமே மரிப்பதற்கு ஆயத்தமானார். நாமும் இவ்வாறாக நம்முடைய வாழ்க்கையை தேவனுடைய கைகளில் ஒப்புவித்தவர்களாக மரிப்பதற்கு ஒருநாள் ஆயத்தமாக வேண்டியவர்களாக இருக்கின்றோம். நித்திய ஜீவனைத் தரத்தக்க தேவ வார்த்தைகளை இருதயத்திற்குள் வைத்து வைத்திருப்போமாயின், நாம் மரணத்தைக் குறித்து அஞ்சவேண்டிய அவசியமேற்படாது.

ஒரு நிலையிலிருந்து இன்னொரு நிலைக்குக் கடந்துசெல்லும் ஒரு வாசலாக, ஒரு பாலமாகவே மரணம் காணப்படுகின்றது. இது இறுதியானதும் முடிவானதுமான நிலையல்ல. அதற்கு அப்பால் ஒரு நித்தியமான வாழ்க்கை ஒன்று உண்டு. தேவசாயலைப் பெற்றவர்களாக நாம் சிருஷ்டிக்கப் பட்டுள்ளமையினால், பாவத்தின் தண்டனையாகிய சரீர மரணத்திலிருந்தும் நரக தண்டனையிலிருந்தும் தப்பி, பிழைத்து நித்திய ஜீவனை அடைவோம் என்றே வேதாகமம் தேவனுடைய பிள்ளைகளுக்கு நம்பிக்கை அளித்துள்ளது.


மறுபிறவி வேதாகம ரீதியானதல்ல

மனிதராகிய நாம், ஒரேதரம் பிறப்பது எப்படியோ அப்படியே நாம் ஒரேதரம் மரிப்பதும் நியமிக்கப்பட்டிருக்கின்ற ஒன்று (எபி.9:27). ஆகவே மறுபிறவி எடுத்தல் என்பது வேதாகம ரீதியானது அல்ல. ஒருவன் மறுபடியும் மறு பிறவி எடுக்க இயலாது. ஒருவரின் ஆத்துமா இன்னொரு நபரின் சரீரத்திற்குள் செல்லவும் முடியாது. காரணம் சிருஷ்டிகரான தேவன் ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் வாழத்தக்க ஒரேயொரு சரீரத்தையே கொடுத்துள்ளார். மரணத்தின் பின்னர் அந்த ஆத்துமா நித்தியமாக வாழும். அது உயிர்த்தெழுந்த மகிமையான சரீரமாகக் காணப்படும். இவ்வாறு நித்திய நித்தியமாக வாழும் ஆத்துமாவானது, ஒன்றில் தேவ சமுகத்திற்குள் செல்லும், அல்லது சாத்தானுடன் வேதனையான நரகத்திற்குள் கடந்துசெல்லும். நமது உடலோவென்றால் ஒருநாள் மண்ணோடு மண்ணாகும். அதாவது சாம்பலோடு சாம்பலாகும்.


கர்த்தருடைய பார்வையில் மரணம்

கர்த்தருடைய பிள்ளைகளின் மரணம் மகிமையுள்ளதாக காணப்படும். உண்மையில், கிறிஸ்தவர்கள் மரிக்கும்போது தேவ பிரசன்னத்திற்குள்ளேயே செல்கின்றார்கள். “நாம் தைரியமாகவேயிருந்து, இந்தத் தேகத்தை விட்டுக் குடிபோகவும் கர்த்தரிடத்தில் குடியிருக்கவும் அதிகமாய் விரும்புகிறோம்” (2கொரி.5:8). இந்தச் சரீரத்திலிருந்து உயிர் பிரிந்துசென்ற அந்த நிமிடம் முதல் ஒரு விசுவாசி கிறிஸ்துவோடு இருக்கிறார். அவர்கள் அழிவில்லாமையைப் பெற்றிருப்பார்கள் (1கொரி.15:42-44). மரணம் ஒரு தற்காலிக நித்திரைக்கு ஒப்பானது. உயிர் பிரிந்துசென்ற உடனே, ஒரு சரீரத்தை நாம் பார்க்கும்போது, அந்த சரீரத்தில் வாழ்ந்துவந்த அந்த நபர், இப்போது கிறிஸ்து இயேசுவுடன்கூட இருப்பதினாலே மகிழ்ச்சியுடையவராகக் காணப்படுவார். “அன்றியும், சகோதரரே, நித்திரையடைந்தவர்களினிமித்தம் நீங்கள் நம்பிக்கையற்றவர்களான மற்றவர்களைப் போலத் துக்கித்து, அறிவில்லாதிருக்க எனக்கு மனதில்லை. இயேசுவானவர் மரித்து பின்பு எழுந்திருந்தாரென்று விசுவாசிக்கிறோமே; அப்படியே இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டு வருவார்” (1தெசலோ.4:13-14). ஆம், இதன் காரணமாகத்தான், “கர்த்தருடைய பரிசுத்தவான்களின் மரணம் அவர் பார்வைக்கு அருமையானது” (சங்.116:15). அது விலையேறப்பெற்ற ஒன்றாகக் காணப்படுகின்றது.


மரண இருளின் பள்ளத்தாக்கிலே கூடவரும் கர்த்தர்

நான் ஒரு விசுவாசியாக இருப்பதினால், ஒருநாள் நானும் மரிக்கவேண்டும் என்பதை அறிந்துவைத்திருக்க வேண்டியது அவசியம். உண்மையில், மரணமடைகின்ற ஒரு விசுவாசிக்கு நித்திய மரணமாகிய நரகம் கிடையாது. “.. சாவு எனக்கு ஆதாயம்” (பிலி. 1:21) என பவுல் உறுதிப்பட கூறியதுபோல நாமும் கூறுவோம். காரணம் சாவு நம்மை ஒன்றும் பண்ணமுடியாது. கிறிஸ்துவோடு நித்தியமாக வாழத்தக்க ஆதாயத்தையே சாவு ஒரு விசுவாசிக்கு கொடுக்கமுடியும். ஆம், கிறிஸ்து இயேசுவுக்குள் இருப்பவர்களுக்கு, “…மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது…” (1கொரி. 15:54)

நாம் மரிக்கும் நிலையில் இருக்கும்போது கூட கர்த்தர் அங்கே நம்கூடவே இருக்கின்றார். “அவர் மரணத்தை ஜெயமாக விழுங்குவார்; கர்த்தராகிய தேவன் எல்லா முகங்களிலுமிருந்து கண்ணீரைத் துடைத்து, தமது ஜனத்தின் நிந்தையை பூமியிலிராதபடிக்கு முற்றிலும் நீக்கிவிடுவார்; கர்த்தரே இதைச் சொன்னார்” (ஏசா.25:8). “…அது அதிக நன்மையாயிருக்கும்” (பிலி.1:23). மரணத்தைக் கடந்த நிலையில் நாம் ஒருவரையொருவர் அடையாளம் கண்டுகொள்ளக்கூடிய நிலையில் காணப்படுவோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சரீரமானது உயிர்த்தெழுந்த பின்பு மகிமைக்குரியதாக மாறியதுபோலவே நம்முடைய சரீரத்தையும் மாற்றுவார்.

“நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். அவர் …நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்” (பிலிப். 3:20,21).

நாம் மரித்தபின்பு தேவனுடைய சமுகத்தில் அவரை சேவிக்கின்றவர்களாகக் காணப்படுவோம். “அவருடைய ஊழியக்காரர் அவரைச் சேவித்து, அவருடைய சமுகத்தைத் தரிசிப்பார்கள்; அவருடைய நாமம் அவர்களுடைய நெற்றிகளில் இருக்கும்” (வெளி. 22:4).

மரணம் என்ற காரிருளானது உங்களை மேற்கொள்ளவரும்போது, கர்த்தர் உங்களைப் பாதுகாத்துக் கொள்வார் என்ற நிச்சயமுள்ளவராக இருங்கள். “நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும். என் ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும்; நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்” (சங்.23: 4,6) என தாவீதைப்போல கூறுங்கள்.

மரணவேளையிலே, கர்த்தருடைய வார்த்தையிலே உறுதியுள்ளவர்களாக இருப்பதற்கு இன்றே, தேவனுடைய கரத்தை இறுகப் பற்றிப் பிடித்தவர்களாக நடக்க ஆரம்பிப்போமாக. கர்த்தர் தாமே நித்திய ஜீவனைத் தந்து, நம்மை தம்மோடுகூட மறுமையிலே சேர்த்துக் கொள்வாராக!

நன்றி : http://sathiyavasanam.in/?page_id=6699


விடுதலையாக்கப்பட்ட அடிமை


இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகள் ஆனதினால் பரிசுத்தமாக்குதல் உங்களுக்கு கிடைக்கும் பலன். முடிவோ நித்திய ஜீவன். ( ரோமர் 6 : 22 )

மிகவும் கொடிதான பாடுகள் மத்தியிலே தவித்துக்கொண்டிருந்த சில அடிமைகள், விற்ப்பனைக்காக சந்தைக்கு கொண்டு வரப்பட்டார்கள். ஒவ்வொரு அடிமையின் உடலிலும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட காயங்களும் அவர்கள் உள்ளுணர்விலும் நிச்சயமாக இருந்திருக்கும்.

கண்களிலே ஒரு வித ஏக்கம் யார் எம்மை வாங்கப்போகிறார்களோ? அவர்களின் ஆதிக்கம் எப்படிப்பட்டதாய் இருக்குமோ? என்றதோரு அங்கலாய்ப்பு. அந்நேரத்தில் அங்கே வந்த ஒரு செல்வந்தன் மிகவும் காயப்பட்டிருந்த ஒரு அடிமையை அதிகமான விலை கொடுத்து வாங்கி அவனை அவ்விடத்தை விட்டு வெளியே கொண்டு வந்து, நீ உன் வழியே போ, நான் என் வழியே போகிறேன் என்றான்.

திடுக்குற்ற அவ்வடிமை, என்னை விலை கொடுத்து வாங்கிய உமக்கே நான் சொந்தம் என்று சொல்லி அச் செல்வந்தன் பாதத்திலே தன்னைத் தானாகவே விரும்பி அர்ப்பணித்தான்.

பாவம் எமது வாழ்வை அடிமை கொண்டிருந்தது. எமது ஆத்துமாக்கள் காயமடைந்து குற்றுயிராய் தவித்துக்கொண்டிருந்தது. எம்மை யார் மீட்டுக்கொள்வார்களோ என்று நாம் அங்கலாய்த்த வேளையில், எம்மை தேடி வந்து எமது பாவங்களுக்காக விலையேறப்பெற்ற தமது தூய இரத்தத்தை உன்னதமான கிரயமாக செலுத்தி எம்மை மீட்டுக்கொண்டார்.

ஆண்டவராகிய இயேசு அவர் எமக்கு தந்த மீண்பின் தன்மையை உணர்ந்திருக்கிறோமோ? எமது பாவங்களுக்காய் நாம் அனுபவிக்க வேண்டிய தண்டனையை, தாமே சிலுவையில் அனுபவித்து, மரித்து அடக்கம் பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்த ஆண்டவருக்கு எமது வாழ்வை அர்ப்பணிப்பதில் என்ன தாமதம்?

ஆண்டவர் எம்மை அடிமைகொள்கிறவர் அல்ல; நாமே விரும்பி எம் வாழ்வை அவர் பாதத்தில் அர்ப்பணிப்பதே பவுல் ரோமரில் குறிப்பிடும் ‘பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளானதால்” என்பதின் கருத்தாகும். பாரிசுத்தாவியினால் உருவாகும் கருவை கர்ப்பத்திலே சுமக்கும் படிக்கு கன்னிமரியாளுக்கு தேவனால் அழைப்பு வந்த போது ‘இதோ ஆண்டவரின் அடிமை” என்று ஒப்புக்கொடுத்தார் அல்லவா அதுவே உண்மையான ஒப்புக்கொடுத்தலாகும்.

நாமும் இன்னமும் அடிமைகளா? அல்லது மீட்கப்பட்ட அடிமைகளா? நாம் யாருக்கு இன்னமும் அடிமைகளாய் இருக்கிறோம். பாவத்திற்கா? அல்லது பாவத்தினின்று விடுதலையாக்கின ஆண்டவருக்கா? சற்றே நம்மை ஆராய்ந்து பார்த்து நமது வாழ்வை சீர்படுத்துவோம்...

முழு வேதாகமத்தின் சாராம்சமே இரட்சிப்பு!


முழு வேதாகமத்திலும் இருதயமாக கருதப்படுவது இரட்சிப்பேயாகும். தகுதியற்ற அல்லது காணாமற்போன ஒரு மனுஷனுடைய பாவத்தோடு சம்பந்தப்பட்ட எல்லாவற்றிலுமிருந்து அவனைக் காப்பாற்றும் தேவனுடைய உன்னத கிரியையே இரட்சிப்பு.

• இது முற்றும் முழுவதுமாக கர்த்தருடையதாகும். (யோனா 2:9)

• இரட்சிப்பை மனிதன் எவ்விதமான கிரியைகளைச் செய்தும் பெறமுடியாது. (ரோம 3:20, 4:16, எபே 2:8-10)

• இரட்சிப்பு என்ற சொல் வெறும் பாவமன்னிப்பை மட்டும் கூறாமல், நீதிமானாகுதல், மறுபிறப்படைதல், வரப்போகும் உயிர்த்தெழுதல், மகிமையடைதல் போன்ற காரியங்களை உள்ளடக்கிய தொடர்ச்சியான காரியமாகும்.

• பாவமாகிய குற்ற உணர்விலிருந்தும் தினந்தோறும் தினந்தோறும் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுதலையடைந்து பரிசுத்தமடைதலும் பாவத்தின் சமூகத்திலிருந்து மீட்கப்பட்டு மகிமையடைதலையும் இரட்சிப்பு தன்னகத்தே கொண்டுள்ளது.

• இரட்சிப்பைக் கொடுப்பதற்காகவே தேவன் பூலோகத்திற்கு வந்து பாடுபட்டு மரித்து அடக்கம்பண்ணப்பட்டு உயிர்த்தெழுந்தார்.

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். - (மத்தேயு 20: 26,27).

மிகச்சிறந்த படிப்பாளரான Booker T. Washington என்பவர் Hampton Institute in Virginia என்னும் இன்ஸ்டியூட்டியில் சேருவதற்காக இன்டர்வியூவிற்காக சென்றிருந்தார். அந்த இன்ஸ்டிடியூட் மிகவும் பெயர் பெற்றதாகும். அதில் இடம் கிடைப்பது மிகவும் அரிது, அப்போது அங்கு வந்த தலைமை ஆசிரியை அங்கிருந்த வகுப்பறையை கழுவ சொல்லிவிட்டு, அங்கிருந்த பெஞ்சுகளையும் துடைக்க சொல்லி விட்டு போனார்கள். அவர் பாடம் சம்பந்தமான கேள்வியை கேட்பார்கள் என நினைத்தால் இந்த வேலையை சொல்லுகிறார்களே என்று அவருக்கு கோபமிருந்தாலும் வேறுவழியில்லாமல், அதை துடைக்க ஆரம்பித்தார். சிறிது நேரம் கழித்து அங்கு வந்த தலைமை ஆசிரியை எல்லாவற்றையும் தனது கைக்குட்டையால் துடைத்து பார்த்து, ‘சிறப்பான காரியத்தை செய்தாய்’ என்று அவரை பாராட்டி அவருக்கு அங்கு ஒரு இடத்தை கொடுத்தார்களாம். அது தன் வாழ்க்கையையே மாற்றிற்று என அவர் தனது புத்தகத்தில் எழுதினார்.

அன்று ஒரு நாள் மேல் வீட்டறையில், இயேசுகிறிஸ்து தன் வஸ்திரங்களைக் கழற்றிவைத்து, ஒரு சீலையை எடுத்து, அரையிலே கட்டிக்கொண்டு, பின்பு பாத்திரத்தில் தண்ணீர் வார்த்து, சீஷருடைய கால்களைக் கழுவவும், தாம் கட்டிக்கொண்டிருந்த சீலையினால் துடைக்கவும் தொடங்கினபோது அதை பார்த்து கொண்டிருந்த சீஷர்களுக்கு எப்படி இருந்திருக்கும்! அவர்கள் அவரை ராஜாவாக, தங்கள் குருவாக, ஆண்டவராக, போதகராக ஏற்றிருந்தபோது அவரே தங்களது கால்களை கழுவுகிறரரே என்று நெருடல் அடைந்திருந்தாலும் அவர்களால் ஒன்றும் பேச முடியவில்லை. அவர்கள் எதிர்பாராத காரியத்தை கிறிஸ்து செய்து கொண்டிருந்தார். அவர்கள் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தார்கள். கடைசியில் பேதுரு மாத்திரம் துணிவுடன், ‘ஆண்டவரே, நீர் என் கால்களைக் கழுவலாமா’ என்று கேட்டபோது, இயேசுகிறிஸ்து ‘ஆண்டவரும் போதகருமாகிய நானே உங்கள் கால்களைக் கழுவினதுண்டானால், நீங்களும் ஒருவருடைய கால்களை ஒருவர் கழுவக்கடவீர்கள். நான் உங்களுக்குச் செய்ததுபோல நீங்களும் செய்யும்படி உங்களுக்கு மாதிரியைக் காண்பித்தேன்’. (யோவான் 13:4-15) என விளக்கினார்.

இன்று கிறிஸ்தவர்கள் என்று சொல்லுகிற நமக்குள் தாழ்மை இருக்கிறதா? நாம் தேவனாக வணங்குகிற இயேசுகிறிஸ்துவே கால்களை கழுவினதுண்டானதால், நாம் எவ்வளவு தாழ்மையாய் இருக்க வேண்டும்? அவருடைய மாதிரியை பின்பற்றுகிறோமா? 

மற்றவர்களுடைய கால்களை கழுவாவிட்டாலும், மற்றவர்களை உதாசீனமாக எண்ணுவதாவது குறைந்திருக்கிறதா? இன்று அந்த தாழ்மைக்கும் நமக்கும் எவ்வளவு தூரமாகி விட்டது! கொஞ்சம் கையில் பணம் கிடைத்து விட்டால், மற்றவர்களை துச்சமாக எண்ணுகிற மனம், (ஏதோ அந்த பணம் என்றென்றும் நிலைத்திருக்கிறமாதிரி) வேலையில் சற்று உயர்த்தப்படடால், மற்றவர்கள் எனக்கு கீழ் என்கிற மாதிரியான நடவடிக்கைகள், அது வேலையிடத்தில் மாத்திரம் அல்ல, சக விசுவாசிகளிடமும் காட்டுவது எந்த விதத்தில் நியாயம்? கிறிஸ்துவின் போதகத்திற்கு மாறாக நடக்கிறதல்லவா?

ஊழியத்திலும் நான்தான் பெரியவன், உனக்கு அந்த தாலந்து இல்லை, ஆகவே நான் உன்னைவிட பெரியவன் என்று மற்றவர்களை மட்டமாக எண்ணும் நினைவுகள், அவன் என்ன சின்ன ஊழியக்காரன் நான் பெரியவன், எனக்கு இருக்கிற அந்தஸ்து என்ன, புகழ் என்ன என்கிற பெருமையான எண்ணங்கள், மட்டுமல்ல, அதற்கேற்ப நடவடிக்கைகள்! அவை கர்த்தருடைய சீஷன் என்பதை விட பரலோகத்திலிருந்து பெருமையினிமித்தம் கீழே தள்ளப்படட லூசிபரின் எண்ணங்கள் அல்லவா நிறைந்து காணப்படுகிறது!

ஒருமுறை சாது சுந்தர் சிங் இங்கிலாந்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ஒரு சகோதரி, ‘உமக்கென்ன, நீர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட பின், உமக்கு என்ன வரவேற்பு, என்ன புகழ்!’ என்று அவரிடம் கூறினார்கள். அப்போது அவர் சொன்னார், ‘இயேசுகிறிஸ்து ஏறி சென்ற கழுதையாகவே நான் என்னை நினைக்கிறேன். அன்று கிறிஸ்துவை சுமந்த கழுதை, தனக்குதான் மக்கள் வரவேற்பளிக்கிறார்கள். தனக்குதான் மகிமை செலுத்துகிறார்கள் என்று நினைத்திருந்தால் அது எத்தனை முட்டாள்தனமோ அதுப் போலத்தான், இப்போது கிடைக்கிற புகழ் எல்லாம் எனக்குத்தான் என்று நான் நினைத்தால் நானும் ஒரு முட்டாளாகத்தான் இருப்பேன். கிறிஸ்துவை நான் சுமப்பதால்தான் எனக்கு இந்த புகழ் எல்லாம், கிறிஸ்து எனக்குள் இல்லாவிட்டால், நான் வெறும் கழுதைதான்’ என்று கூறினாராம்! என்ன ஒரு தாழ்மை பாருங்கள்! அப்படிப்பட்ட
தாழ்மையுள்ள பாத்திரங்களையே கர்த்தர் இந்நாளில் தேடுகிறார், பணம், பதவி பொருள், வந்தாலும் மாறிப்போகாத, அகந்தை கொள்ளாத இருதயத்தையே தேவன் தேடுகிறார். 

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது (யாக்கோபு 4:6).

பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிற தேவன், ஆனால் தாழ்மையுள்ளவர்களுக்கு எத்தனை கிருபைகளை கொடுக்கிறார் பாருங்கள்! அழிவுக்கு முன்னானது அகந்தை என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது. நமது குலத்தை பற்றியோ, நமது அந்தஸ்தை பற்றியோ, நமது ஊழியங்களை குறித்தோ நாம் பெருமை கொள்ளக்கூடாது, எல்லாமே கர்த்தர் கொடுத்தது. அவர் நமக்கு கொடுக்க கொடுக்க, நாம் இன்னும் நம்மை தாழ்த்தும்போது, இன்னும் அதிகமாய் அவர் நமக்கு கொடுக்கிறார், உயர்த்துகிறார். ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட கிருபைகளில், நம்மையே உயர்த்தும்போது கர்த்தர் நம்மை விட்டு அகன்று போகிறார். ஆனால் அதை அறியாமல் நாம் இன்னும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்று நினைத்து கொண்டிருக்கிறோம்.

உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாதுள; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன் என்ற கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றுவோம். கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பார்.


ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்ற தரிசனம்.

'உலகமெங்கும் போய் சுவிஷேசத்தை அறிவியுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் பரமேறிச் சென்ற நமதாண்டவர் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து ஒருவருக்காவது சுவிஷேசத்தை அறிவிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே இக் கடைசி காலத்தில் வாழ்கின்ற நாம் நமது நேரத்தை ஆண்டவருக்கென்று செலவழிப்போமா?

'தேவன் அன்பாகவே இருக்கிறார்", 'கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பாருங்கள்" என்று கிறிஸ்துவை அறியாதோருக்கு தெரிவித்து அவரிடத்தில் நாம் பெற்ற ஆசீர்வாதங்களை பகிர்ந்துகொள்வோமா?

எத்தனையோ மிஷனரிகள் தங்கள் உயிரையும் பாராது ஆதிவாசிகளுக்கு இயேசுவைப் பற்றி தெரியாத மக்களுக்கு, மலை, காடு, பனி, வெயில், மழை எனப் பாராது ஆண்டவராகிய இயேசுவை பற்றிய நற்செய்தியை அறிவித்து இரத்தச் சாட்சிகளாகவும் மரிக்க அஞ்சாது சுவிஷேசத்தைச் சுமந்து சென்றனரே. நாமும் அவர்களைப்போல காடு மலை என்றெல்லாம் சென்று சுவிஷேசத்தை அறிவிக்காவிட்டாலும்கூட நாம் இருக்கும் இடத்திலே, சபையில், அல்லது நமது வீட்டண்டையில் வசிக்கின்றவர்கள் மத்தியில் அல்லது நமது சமுதாயத்தில் இப்பணியை நிறைவேற்றலாமே. இதுதான் ஆண்டவர் நம்மிடம் எதிர்பார்க்கின்ற தரிசனம். இதை நிறைவேற்ற இன்றே முயற்சிப்போமா?

-.வஷ்னீ